Thursday, January 27, 2011

படித்ததில் பிடித்தது…..

ஒரு முறை அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஆபீஸ் பையன் வேலைக்கு  விண்ணப்பித்திருந்தான்.சில நாள் கழித்து இண்டர்வியு லெட்டர் வந்த்தது குறிப்பிட்ட நாளில் அலுவலகத்திற்க்கு சென்றான்.அங்கு நான்கு அதிகாரிகள் அவனை நேர்முக தேர்வு செய்தனர் அவர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் சிறப்பாக பதிலளித்தான்.அவர்கள் ”நீ நன்றாக  பதிலளித்தாய் உன்னை தேர்வு செய்யலாம் என நினைக்கிறோம்.நீ எப்போது வேலையில் சேரவேண்டும் என்பதை இ-மெயில் அனுப்புகிறோம்   உன் இ-மெயில் ஐடி கொடு” என்றார்கள்,

அந்த இளைஞன்,எனக்கு இ-மெயில் ஐடி யும் இல்லை கம்பியுட்டரும் இல்லை என கூறினான்.அவர்களுக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது,”இவர் மைக்ரோசாப்ட் வேலை செய்யப்போகிறேன் என்கிறார் இ-மெயில் இல்லையாம்”என்று உனக்கு வேலை இல்லை  என  திருப்பி அனுப்பிவிடுகிறார்கள்.

அந்த சமயத்தில் அவன் கையில் 100 டாலர் தான் இருந்தது அதைவைத்து தான் வாழ்க்கையை ஓட்ட வேண்டும்.அங்கேயே சாலை ஓரத்தில் ஒரு சின்ன கடையைத் தொடங்கினான், அவன்.கிடுகிடுவென்று வளர்ந்து அந்தக்கடை ஒரு பெறிய பிஸினஸ் சென்டராகிவிட்டது.

குறுகிய காலத்தில் அவன் திறமையால் நூற்றுக்கணக்கான கடைகளை திறந்து பெறும் பணக்காரனாகிவிட்டான்.அவரை ஒரு பிஸினஸ் பத்திரிக்கையில் இண்டர்வியூ செய்தார்கள்.

பேட்டி முடிந்தவுடன்,”இந்த கட்டுரையை உங்களுக்கு இ-மெயிலில் அனுப்புகிறோம் உங்கள் இ-மெயில் கொடுங்கள்” என  பத்திரிக்கையாளர்கள் கேட்டார்கள்.”எனக்கு இ-மெயில் ஐடி இல்லையே” என்று அவர் சொன்னார்.அப்பொழுது அந்த  பத்திரிக்கையாளர் “இ-மெயிலும் கம்பியூட்டர் இல்லாமலேயே இவ்வளவு வளர்ந்திருக்கீங்க,இ-மெயில் இருந்தால் நீங்கள் எங்கே இருப்பீங்கன்னு தெரியுமா” என்று கேட்டார்.அப்பொழுது நம் ஆள் சொன்னார்,”எனக்கு நல்லா தெரியும்.மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஆபீஸ் பையனாக இருந்திருப்பேன்”.

1 comment:

karthi said...

இதுல இருந்து என்ன தெடியுது நீயும் email_id வச்சுக்காத , இந்த bloga அழிச்சுரு மக்களாவது நிம்மதியா browse பண்ணுவாங்க