Wednesday, December 29, 2010

எடை குறைப்பும் ஒரு ரூபாயும்-பாகம்2

முதலில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளை பார்ப்போம்.நம் அன்றாட உணவில் தவிற்க்க முடியாத வகை அரிசி
ஆனால் எடை குறைய  நாம் தவிற்க்க வேண்டிய முதல் உணவே அரிசி தான்.
ஒரு நாளைக்கு சுமார் 1000 கலோரிகளை நாம் நம் உடற்பயிற்ச்சியின் மூலம் செலவிட வேண்டும்.
தோராயமக[1000 kcal=200gm] ஆகும்.
இப்போது தினசரி மாலை அல்லது காலை 1.5மணி நேரம் உடற்பயிற்ச்சி செய்ய வேண்டும்.அருகில் உள்ள ஜிம்மிற்க்கோ
அல்லது,மைதானத்திற்கோ சென்று செய்யலாம்.ஜிம்மில் உடற்பயிற்ச்சியாளர் பயிற்ச்சி அளிப்பார்கள் என்றாலும் நான்
ஜிம்மில் மேற்கொண்ட பயிற்ச்சிகளையும் உங்களுக்கு சொல்கிறேன்.

சராசரியாக நடைபயிற்சி 25 நிமிடம்,சைக்கிள் 20நிமிடம்,மற்றும் வயிறு,என பிரித்து கொள்ள வேண்டும்.
இப்போது தினசரி மேற்கொள்ளவேண்டிய உணவு முறைகளை பார்ப்போம்.
காலை- சப்பாத்தி- 3
11.00.மணிக்கு-ஏதேனும் ஒரு பழ ஜூஸ்
1.30.மணிக்கு-முட்டை வெள்ளைக்கரு 4,சப்பாத்தி- 2
5.00.மணிக்கு-கருப்பு டீ,சுண்டல்.
இரவு.8.00.மணிக்கு-சப்பாத்தி- 3,முட்டை வெள்ளைக்கரு 2.
இது ஒரு நாளைய சாப்பாட்டு முறையாகும் மேலும் கோதுமை ரொட்டி,காய்கள்,பருப்பு வகைகள்,போன்றவற்றை
நம் விருப்பத்திற்கேற்றவாரு அளவாக எடுத்து கொள்ள வேண்டும்.
உணவு பழக்கமும் சரியாக பின்பற்ற வேண்டும்.உடற்பயிற்ச்சியும் தவறாமல் செய்ய வேண்டும்.
மேலும் நம் எடையயை கண்காணித்து வரவேண்டும்.

  

Monday, December 27, 2010

எடை குறைப்பும் ஒரு ரூபாயும்-பாகம் 1

நம்மில் பருமனாக இருக்கும் எவருக்கும் எடை குறைத்து ஸ்லிம் ஆக வேண்டும் என்பதில் நிறைய சபதம் கூட செய்திருப்போம் ஆனால் அதை  செயல்படுத்துவதற்கு தான் நாளை தள்ளி போட்டுக்கொண்டே இருப்போம்.
புத்தாண்டிலிருந்து,தீபாவளி முடிந்து,அடுத்த வாரத்திலிந்து என்று
இருப்பினும் நல்லா சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது திடீரென நாக்குக்கு பிடிச்ச சாப்பாட்டை நிறுத்துவது கஷ்டம் தான்.ஆனால் எடை குறைந்து
அதனால் ஏற்படும் மாற்றம் பலன் நமக்கு தெறிய வரும்போது நாம் அடையும்
மகிழ்ச்சி அனுபவித்தால் தான் புரியும்.
                                                                ஒரு ரூபாய்

சரி இப்போது எடை குறைக்க ஒரு ரூபாய் போதுமா என்று கேட்டால் ஒரு ரூபாயில் ஆரம்பிக்கலாம் என்று சொல்கிறேன்.எப்படி முதலில் நாம் நம் எடைஎவ்வளவு நம் உயரத்திற்கேற்ற எடை இருக்கிறோமா என தெறிந்துகொள்ள வேண்டும்.
அதாவது உ.ம் நம் உயரம் 174cm எனில் அதில் 100ஐ கழித்தால் 74 இது தான் நம் உயரத்திற்கு சரியான எடை.முதலில் எடை குறைக்க ஒரு இலக்கு வைத்து கொள்ள வேண்டும்.
ஒரு வாரத்திற்கு 1.5கிலோ என நம்மால் எவ்வளவு முடியுமோ அதை பொறுத்து,ஆனால் வாரத்திற்கு 1.5 கிலோ என்பது தான் ஒரு ஆரோக்கியமான சரியான முறை என கருதுகிறேன்.
முதலில் எடை குறைக்க ஆரம்பிக்கும் முதல் நாள் ஒரு ரூபாய் நாணயம் போட்டு எடை பார்க்கும் டிஜிட்டல் மிஷினில் நம் எடையை பார்த்து
 கொள்ள வேண்டும்.மேலும் எடை குறைக்கும் காலத்தில் வாரம் ஒரு நாளில்   எடையை கண்காணித்து கொண்டே வரவேண்டும்.
நம் ஊரில் சில்லரை தட்டுப்பாடு அதிகம் என்வே ஒரு ரூபாய் காயின் கிடைக்கும் போதெல்லாம் சேர்த்து வைத்துகொள்ளுங்கள்.
ஒரு முக்கியமான செய்தி இந்த பதிவை நான் படிப்பறிவிலோ,பட்டறிவிலோ எழுதவில்லை என் சொந்த அனுபத்தில் எழுதுகிறேன்.ஆம் நான் 2008ல் சுமார் 100கிலோ எடை இருந்தேன்.இப்போது 82 கிலோ இருக்கிறேன்.
                         எனவே வாருங்கள் ஸ்லிம்மான உடற்கட்டை பெறுவோம்.


Monday, November 22, 2010

கொச்சி-தீபாவளி பயணம்



சென்ற தீபாவளிக்கு  கொச்சி சுற்றி பார்க்கலாம் என்று திட்டமிட்டு கிளம்பினோம்.திருப்பூர் ரயில் நிலையத்தில் வண்டி ஏரும் போதே மேகமூட்டமாக இருந்தது சரி  கொச்சியில் மழை நம்மை வெளியே
விடாது என நினைத்தபடியே அமர்ந்தோம்.
வண்டி சரியாக மதியம் 1.35 க்கு எர்ணாகுளம் அடைந்த்தது.ஏற்கனவே நண்பர்கள் மூலம் சில இடங்கள் தெரியும் என்றாலும் எங்கள் எதிர் இருக்கையில் பயணம் செய்த எர்ணாகுளம் வாசியிடம் பேச்சு கொடுத்ததில் அவர் சில இடங்கள் பற்றி கூறினார்.கூறினார் என்பதை விட
உதவினார் என்பதே சரி.
ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த்ததும் சப்பிட்டு விடலாம் என்று
ஹோட்டல் ஒன்றிற்கு சென்றோம் அங்கு நம் ஊர் சாப்பாடும் இருந்தது விலையும் பரவாயில்லை. கொச்சினில் சுற்றி பார்க்க நாங்கள் முதலில் சென்றது எர்ணாகுளம் டு வைபின்.அதாவது போட்டில்
டிக்கட் வெறும் இரண்டு ரூபாய் தான்.நம் ஊர் டவுன் பஸ் போல் உள்ளது வழியில் துறைமுகத்தில்
லண்டன் பய்ண கப்பல் ஒன்று பிரமாண்டமாய் நின்றிறுந்தது.அதன் பெயர் ஓசன் வில்லேஜ் [மிதக்கும் கிராமம்]
சரியான பெயர் தான்  எட்டு மாடி கொண்டிறுந்தது.பிறகு அங்கிருந்து
                                            போர்ட் கொச்சி.
அங்கு மகாத்மா காந்தி கடற்கறை,சீன மீன் பிடி வலைகள்,புனித பிரான்சிஸ் சர்ச் பொன்றவை முக்கிய இடங்கள்.
கடற்கறை என்றால் மணற் பரப்புகள் இல்லை ஆனால் கடலை ரசிக்க பென்ச் போட்டு உள்ளார்கள்.கடல் அமைதியாக
இருக்கிறது அதை ரசித்து விட்டு அங்கிருக்கும் வட நாட்டு வியாபாரிகளிடம் சிறிய கன்ணாடி வேலைபாடுககள்
உள்ள நகை பெட்டி ஒன்றை நண்பர் வாங்கினார் விலை சற்று பரவாயில்லை.
நான் உள்ளூர் கடையில் என் மகனுக்கு ஒரு மர வேலைப்பாடு கொண்ட கப்பல் வாங்கினேன் விலை சற்று அதிகம்
பிறகு அருகில் உள்ள சர்ச்க்கு சென்றோம்.சுமார் ஜநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது நிறைய வெளிநாட்டு பயணிகளை
பார்க்க முடிந்தது.அங்கிருந்து போட் ஜெட்டி[படகு குழாம்] நோக்கி நடக்க ஆரம்பித்தோம் தாகமாக இருந்ததால் ஒரு கடையில்
நன்னாரி சர்பத் வாங்கினோம் அது நல்ல சுவையாகவே இருந்த்தது.எங்கு பார்த்தாலும் பசுமை குளிர்ச்சி.சுமார் பனிரெண்டு மணியளவில்
போட் ஜெட்டி[படகு குழாம்]  வந்தடைந்தோம்.நாங்கள் வரவும் படகும் வர அதில் ஏறி கொண்டோம்.மீண்டும் எர்ணாகுளம்
வந்தோம்.
                                          போல்கட்டி பேலஸ்
எர்ணாகுளம் டு போல்கட்டி பேலஸ் செல்ல மற்றொரு போட் ஜெட்டி[படகு குழாம்] சென்றோம்.அங்கு அரை மணிக்கு ஒரு
போட்தான் உண்டு.சிறிது நேரம் காத்திருந்தோம் அந்த சமயத்தில் அங்கிருக்கும் சுற்றுலா படகுகாரர்கள் ஒரு மணி நேர பயணத்திற்கு
ஜம்பது ரூபாய் என்று அழைத்து கொண்டிருந்தர்கள்.அதில் ஏறவில்லை.அப்போது அரசு போட் வந்தது .அதில் ஏறினோம்
அங்கிருந்து போல்கட்டி பத்து நிமிடம் தான் .அங்கு பெறிய சுற்றுலா இடம் ஒன்றும் இல்லை.சுமார் முன்நூறு ஆண்டுகளுக்கு
முன்பு அரண்மனை இருந்திருக்கிறது அதை தனியார் நிறுவனம் வாங்கி இப்போது மூன்று நட்சத்திர ஹோட்டல் நடத்துகின்றனர்.
எனவே அங்கு அதை சுற்றி பார்க்க அனுமதி இல்லை.ஆனால் தங்கலாம் ஒரு நாளைக்கு நூறு டாலர்கள் வரிகள் தனி[ரூ.5000 வரும்]
அது உங்கள் பேங்க் பேலன்ஸை பொறுத்தது.மற்றபடி சுற்றி உள்ள புல் வெளிகளில் நடந்து கடலை பார்த்து ரசிக்கலாம் போட்டோ எடுக்கலாம்.
அவ்வளவே..இதை தவிர்த்து இன்னும் நிறைய இடங்கள் சுற்றி பார்க்க உள்ளன.
                                             ப்ரிபெய்டு ஆட்டோக்கள்
இந்த இடத்தில் கொச்சியில் ஆட்டோக்கள் பற்றி சொல்லியே ஆகவேண்டும்.அங்கெல்லாம் நம் ஊர் போல குத்துமதிப்பாக
விலை சொல்வதில்லை.ரயில்நிலைய வாசலிலேயே ப்ரிபெய்டு ஆட்டோ பூத் உள்ளது அங்கு நாம் செல்ல வேண்டிய இடத்தை சொல்லி இரண்டு
ரூபாய் கொடுத்தால் தொகை எவ்வளவு என்று பில் அடித்து கொடுத்து விடுகிறார்கள் அதை நாம் இறங்கும் இடத்தில் ஆட்டோகாரரிடம் கொடுத்து
விடவேண்டும் அவ்வளதான்.மேற்கொண்டு ஒரு ரூபாய் கூட ஆட்டோகாரர் கேட்பதில்லை.சராசரியாக ஒரு கிலோமீட்டருக்கு ஜந்து ரூபாய் வருகிறது.
மிக நல்ல ஏற்பாடு அல்லவா...
                                        ஹோட்டல்கள்,தங்கும் விடுதிகள்
எர்ணாகுளத்திலேயே நிறைய ஹோட்டல்கள்,தங்கும் விடுதிகள் உள்ளன. ஹோட்டல்களில் இட்லி தவிர நம் ஊர் உணவுகள் அனைத்தும் கிடைக்கிறது
ஆனால் என்ன புரோட்டா ரூபாய் 7.00என்றால் அதற்கு தொட்டுகொள்ள சிக்கன் குருமா ரூ80.00க்கு வாங்கவேண்டும்.மற்றபடி தோசை,பூரிக்கெல்லாம்,
சாம்பார்.சட்னி உண்டு.தங்கும் விடுதிகளில் இரண்டுபேர் தங்கும் அறைக்கு ரூ400 வாங்குகிறார்கள் . அறையில் டிவி,பீரோ,சுத்தமான படுக்கைகள்,சுடுதண்ணீர்
எல்லாம் உண்டு.சீசன் காலங்களில் இதே அறைக்கு ரூ800 கூட வாங்குவார்கள் என நினைக்கிறேன்.எல்லா ஹோட்டல்களிலும் குடிப்பதற்கு சுடுதண்ணீறே
தருகிறார்கள்.எனவே சளியோ மற்ற உபாதைகளோ வரும் வாய்ப்பு குறைவு.ஊர் மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளது நம் சென்னைபோல.
                                               சில குறைகள்
குறைகள் என பார்த்தால் அங்கு உள்ள பஸ்கள் மிக பழைய மாடலாக உள்ளது.பஸ்நிலையம் சுத்தமும் சுமார்தான் [நம் ஊர் போலவே].மேலும் யாரிடமாவது
வழி கேட்டால் நாம் ஏதோ அவரிடம் கடன் கேட்பதுபோல் பார்க்கிறார்கள்.நம் ஆட்கள் எவ்வளவோ மேல்.ஆட்டோகாரர்கள் தான் வழி சொல்கிறார்கள்.மற்றபடி
சுற்றி பார்க்க வேண்டிய ஊர் தான் கொச்சி.
              

Tuesday, November 16, 2010

மைனா

நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு நல்ல படம். புது முகங்கள் மிரட்டி உள்ளனர் .இங்கு பன்ச் டயலாக்கு ஹீரோக்கள் மத்தியில் இப்படி ஒரு படம்
கண்டிப்பாக தேவை.

Wednesday, November 3, 2010

தீபாவளி வாழ்த்துக்கள்

அன்புடையீர்